உலக
புத்தகதின (ஏப்ரல் 23) எச்சரிக்கை..
ஒரே நபர் எல்லா புத்தகங்களையும் படிக்க முடியாது. எல்லா நபர்களும் புத்தக வாசிப்பாளர்களோ, வாசித்தவற்றை உரையாடுபவர்களோ, செயல் வலிமைக்காக வாசித்தவற்றைச் சிந்திப்பவர்களோ
அல்ல. வாசிப்பு
பண்பாடே மறைந்து போயிற்று. சமூக
அறிவிற்கு அவசியமான தாய்மொழி வாசிப்பு ஒட்டுமொத்தமாக வற்றிக் கொண்டிருக்கிறது. இந்த எதார்த்ததில் தீவிரமான வாசிப்பு முகாம்களை
உருவாக்காமல் புத்தகங்களை சகமனிதர்களின் சமூகஅறிவு ஊடகமாக புதுப்பிக்கவே முடியாது. மாறாக சமூகதேவையை நிறைவேற்றும் வலிமையிருந்தும்
வரலாற்று இடுகாட்டில் புதைந்துவிடும் அபாயம் புத்தகங்களுக்கு இருக்கின்றது.
இத்தகைய அபாயத்திலிருந்து மீள குடும்பம், நூலகம் உட்பட கல்விநிறுவனங்களும் சமூகவிஞ்ஞான இயக்கங்களும் ஓய்வற்ற வாசிப்பு முகாம்களை உருவாக்குவது
அவசியம். சமூகவிஞ்ஞானிகளுக்கு
வலிமை சேர்ப்போம். அறிவன்புடன்புதியவன்..
No comments:
Post a Comment