எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Wednesday, May 31, 2017

இயல் – 2 வாழ்விடங்களும் சமூகப்பொருளாதார உற்பத்தி உறவுகளும்

இயல் – 2
வாழ்விடங்களும் சமூகப்பொருளாதார உற்பத்தி உறவுகளும்
2.1.முன்னுரை
          இந்த இயலில் ஆய்விற்குரிய ஐந்து புதினங்களிலிருந்து இயற்கையின் அங்கமாகிய பழங்குடி மக்கள் தங்களுடைய செயலூக்கத்தின் அடிப்படையில் உருவாக்கியுள்ள வாழ்விடங்கள் பற்றி ஆராயப்பெறும். தங்களுடைய சமூக வாழ்விற்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதற்காக எத்தகைய தொழில்களில் ஈடுபடுகிறார்கள் என்பதைப் பற்றியும் அவர்கள் பயன்படுத்துகின்ற கருவிகள் பற்றியும்  இவ்வியலில் ஆராயப்பெறும்.
2.2.வாழ்விடச் சூழல்
சோளகர்கள் தங்களுடைய ஊரை தொட்டிஎன்கிறார்கள். ‘சோளஎன்பது சோலை (காடு) என்று மருவியுள்ளது. அந்த ஊரின் பெயர் சோளகர்தொட்டி’ என்று அழைக்கப்படுகின்றது. காடுகளில் உள்ள ஊர் என்பது இதன் பொருள். சோளகர் தொட்டியில் நாற்பது குடும்பத்திற்கு மேலாக வாழ்கிறார்கள். வனத்திற்கு அருகிலேயே அந்த ஊர் அமைந்திருக்கின்றது. அந்த ஊரிலிருந்து வனத்தைப் பிரிப்பதற்காக ஒரு பச்சை நிறத்திலான ஓர் அளவை கல் வனத்துறையினரால் அமைக்கப்பட்டிருக்கின்றது. வனத்தில் நீர் வற்றிவிட்டால் ஊரில் வன எல்லைக்கு அருகிலுள்ள நீர்நிலையில் தண்ணீர் குடிக்க காட்டு விலங்குகள் வந்து செல்கின்றன.
மலையாளிகள் வாழ்கின்ற கொல்லிமலையில் சலசலத்தோடும் நீரோடைகளும், உயர்ந்த மலைமுகடுகளும், திட்டுத்திட்டாக மேகங்கள் படர்ந்திருக்கும் மலைகளும் இருக்கின்றன. நன்கு வெயில் அடித்தாலும் குளிர்ச்சி குறையாத தட்பவெப்ப சூழலும், கண்களை மறைக்கின்ற பனிமூட்டமும் இருக்கின்றன. சிறுசிறு சமவெளிப் பிரதேசங்களும், பலா, எலும்பிச்சை, நாரத்தை, கொய்யா ஆகியவை நிறைந்த சிறுசிறு தோப்புகளும் இருக்கின்றன. ஏலக்குத்துச் செடிகளும், அன்னாச்சிச் செடிகளும், காப்பிச் செடிகளும் இருக்கின்றன. தரிசு பூமிகளில் இண்டு முள் புதர்கள், சூத்தை முள் புதர்கள் இருக்கின்றன. புங்கம் பூக்களும் அவற்றின் மணமும் பரவியிருக்கின்றன. மலையாளிகள் வாழ்கின்ற குடிசைகள் மிகவும் தாழ்வாக இருக்கின்றன. மாட்டுக்கொட்டகைகள் இருக்கின்றன. பன்றிகள் வளர்வதற்கான கூண்டுகள் இருக்கின்றன. கொல்லிமலை மலையாளிகளின் வாழ்விடச் சூழல் இவ்வாறு அமைந்திருக்கின்றது.
            படகர்கள் தாங்கள் வாழும் ஊரை ஹட்டிஎன்று அழைக்கின்றார்கள். மரகதமலை ஹட்டியின் தெற்குத் திசையில் சோலைகள் சூழ்ந்த கானகங்கள் நீண்டு செல்கின்றனமரகத மலை ஹட்டியையும் சோலைக்காடுகளையும் முற்றிலும் சுற்றி மரகத மலைகள் சூழ்ந்திருக்கின்றன. ஹட்டியின் மேற்குத் திசையிலுள்ள உயரமான மலையைத் தேவர் பெட்டா என்று அழைக்கிறார்கள். தேவர் பெட்டா என்பது தேவர் சிகரம் என்று பொருள்படுகின்றது. ஹட்டியின் அருகிலேயே நீர் கொட்டுகின்ற அருவிக்கரை இருக்கின்றது. விளைச்சலுக்கான நிலங்கள் இருக்கின்றன. மரகத மலை        ஹட்டியில் படகர்களது இருபது வீடுகள் இருக்கின்றன. ஹட்டியின் சரிவில் நான்கு தொரியர் பழங்குடிகளின் வீடுகள் இருக்கின்றன. மரகதமலையிலிருந்து வனங்களுக்கு இடையிலுள்ள பள்ளப்பகுதிகளில்  இருக்கின்ற நீர்நிலைகளுக்கு அருகில் குறும்பர்களின் குடியிருப்புகள் இருக்கின்றன. மரகதமலை ஹட்டியில் படகர்கள் அமைத்துள்ள நீண்ட மாட்டுத்தொழுவம் இருக்கின்றது. ஹட்டியின் கீழ்ப்புறமாக இருக்கின்ற மைதானத்தில் ஹேத்தப்பா என்றழைக்கப்படுகின்ற தெய்வத்திற்குக் கோயில் இருக்கின்றது. கோயிலுக்குப் பின்புறத்தில் ஒரு கல்மேடை இருக்கின்றது. இந்தக் கல்மேடை கீழிருந்து ஹட்டிக்கு வருபவர்களைக் கவனிப்பதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருக்கின்றது.
            தாணிக்கண்டி என்ற கிராமத்தில் இருளர்கள் வாழ்கிறார்கள். இந்தக் கிராமமானது வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்தில் இருக்கின்ற மலைகிராமங்களில் ஒன்றாக இருக்கின்றது. மலைகளில் பூர்வீகமாக வாழ்ந்த இருளர் போன்ற பழங்குடி மக்கள் வனத்துறையினரால் மலையடிவார கிராமங்களுக்கு அழைத்துவரப்பட்டுவிட்டார்கள்வெள்ளியங்கிரி மலையின் அடிவாரம் பூண்டி என்று அழைக்கப்படுகின்றது. மலையும் மலைக்கிராமங்களும் வனங்களால் சூழப்பட்டிருக்கின்றன. யானைகளின் வலசைப் பாதைகள் கிராமங்களுக்கு இடையில் இருக்கின்றன. தாணிக்கண்டி, சாடிவயல் ஆகிய இரண்டு மலையடிவார கிராமங்களுக்கு இடையில் ஈசா யோகா மையம் அமைந்திருக்கின்றது. தாணிக்கண்டியிலிருந்து ஈசா யோகா மையத்தைக் கடந்து தண்ணீர்பந்தல் பேருந்துநிலையம் இருக்கின்றது. சித்திரை பௌர்ணமி தொடங்கிய முதல் பத்து நாட்களுக்கு வெள்ளியங்கிரி மலையிலுள்ள சுயம்பு லிங்கத்தை வழிபடுவதற்காக ஏராளமான பக்தர்கள் பக்திச் சுற்றுலா வருகிறார்கள். வெள்ளியங்கிரி மலையில் ஏழு மலைகளைக் கடந்து சுயம்பு லிங்கத்தை அடைகிறார்கள். முதல் மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கின்ற வெள்ளை விநாயகர் கோவிலிலிருந்து மலையேற்றம் தொடங்குகின்றது. மலைக்கிராமத்தில் வாழ்கின்ற இருளர் இன மக்கள் பூண்டிக் கோயிலுக்கு வருகின்ற கவுண்டர்கள் போன்ற கீழ்நாட்டுப் பக்தர்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.
            கிருஷ்ணகிரி மாவட்டத்தில்குட்டி இந்தியாஎன்று அழைக்கப்படுகின்ற தேன்கனிக்கோட்டை வட்டம் இருக்கின்றது. தமிழ், கன்னடம், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளைப் பேசுகின்ற மக்கள் இந்த வட்டத்தில் வாழ்கிறார்கள். இந்த வட்டத்தில்குட்டி இங்கிலாந்துஎன்று புகழப்படுகின்ற தளி ஒன்றியம் இருக்கின்றது. மலைகளில் பூர்வீகமாக வாழ்ந்த இருளர் போன்ற பழங்குடி மக்களின் பெரும்பகுதியினர் வனத்துறையினரால் மலையடிவார கிராமங்களுக்கு அழைத்துவரப்பட்டுவிட்டார்கள். மலையடிவார கிராமங்களில் ரெட்டி, கவுடா, நாயுடு, பறையர், சக்கிலி, இருளர் பழங்குடிகள் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்றனர். நிலப்பிரபுத்துவ சமூக அதிகாரத்திற்கு எதிரான பொதுவுடைமை இயக்க செயலாளர்களின் செயல் திட்டங்களில் இவர்களது வாழ்கையும் இணைந்திருக்கின்றது. இந்தக் கிராமங்கள் வனங்களின் சூழமைவுகளில் அமைந்துள்ளன. இத்தகைய கிராமங்களில் ஒன்றாக பழமரத்துப்பட்டி இருக்கின்றது.
2.3.ஊர்கள்
2.3.1. சோளகர் தொட்டி என்ற ஊரிலுள்ள சோளகர்கள் தொடர்பு கொள்கின்ற பிற ஊர்கள் கீழ்வருமாறு அமைகின்றன.
2.3.1.1.பாலப்படுகைஈரம்மாவின் கணவராகிய புட்டனது ஊர்.
2.3.1.2.பூதிப்படுகைகொத்தல்லியின் மனைவியின் ஊர்.
2.3.1.3.சத்திசத்தியமங்கலம் என்ற ஊரை சத்தி என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். சத்திப்பகுதியிலிருந்து துப்பாக்கிக்குத் தேவையான கந்தகத்தையும் வெடிமருந்தையும் சிக்குமாதா வாங்கிவருகிறார்.
2.3.1.4.மூச்சுக்குழிசந்தன மரத்தைக் கடத்துபவர்களும் பணிசெய்பவர்களும் தங்கியிருக்கின்ற இடம். புட்டன் இங்கிருந்து வீடு செல்லும்போது வழியில் சந்தித்த சிவண்ணாவிடம் வேலை சூழ்நிலையை விளக்குகிறான்.
2.3.1.5.கோயம்புத்தூர்வேட்டையாடும் விருப்பத்துடன் சாலி துரை கொத்தல்லியைச் சந்திக்க கோயம்புத்தூரிலிருந்து வருகிறார்.
2.3.1.6.நொய்தலாபுரம்கரடியை வேட்டையாடிய சிக்குமாதாவைச் சித்திரவதை செய்த வனபங்களா நொய்தலாபுரத்தில் இருக்கின்றது.
2.3.1.7.குரும்பூர்வனத்துறை அதிகாரிகளால் பிரச்சனை வரும்போதெல்லாம் சோளகர்கள் குரும்பூர் மணியக்கார மாதப்பாவிடம் சென்று முறையிடுவது வழக்கம்.
2.3.1.8.புளியம்பட்டிவனத்துறையிடமிருந்து சிக்குமாதாவை மீட்டுத்தர மணியக்காரரால் அனுப்பப்பட்ட ஆளாகிய துரையன் புளியம்பட்டியிலிருந்து மலைக்குப் பஞ்சம் பிழைக்க வந்தவன்.
2.3.1.9.இட்டறைசிக்குமாதாவின் மனைவி கெம்பம்மா பிறந்த ஊர்.
2.3.1.10.பெஜ்ஜிலெட்டிகரியனுக்கு அவனது தந்தை பெஜ்ஜிலெட்டியில் பெண்பார்க்க முயன்றார்.
2.3.1.11.ஆசனூர்பேதன் தனது சீர்காட்டை அபகரிக்க முயன்ற துரையனை எதிர்த்தக் காரணத்திற்காக ஆசனூர் காவல்நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டான்.
2.3.1.12.மாவள்ளம்ஜோகம்மாளின் மகள் ரதி மாவள்ளம் ஊரிலுள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் படிக்கின்றாள்.
2.3.1.13.சோளகணைபடகல் மாதேஸ்வரன் கோயில் சோளகணையில் இருக்கின்றது. கிழவன் ஒண்ணனின் குடிசையும் சோளகணையில்தான் இருக்கின்றது.
2.3.1.14.கரை ஒந்தனைரதியின் தோழியாகிய மல்லியின் தந்தை ஊர்.
2.3.1.15.குன்றி மலைசிக்கையதம்பிடியின் சம்பந்தியாகிய உச்சித்தம்படியின் ஊர்.
2.3.1.16.குட்டையூர்ஒண்ணனின் மருமகளாகிய கெஞ்சியின் பிறந்த ஊர்.
2.3.1.17.தலமலைஅரப்புலி என்பவன் தலமலை பகுதியில் தீக்கங்காணியாக பணிசெய்கிறான்.
3.1.18.கோத்தகிரிரதியின் காதலன் சேகரனது ஊர்
3.1.19.உருளிக்குட்டைசிவண்ணாவின் மனைவி சின்னத்தாயி பிறந்த ஊர்.
2.3.1.20.தொட்டமாராமாதியின் அண்ணன் கெஞ்சனது குடும்பம் கர்நாடகாவிலுள்ள தொட்டமாரா எனும் ஊரில்தான் இருக்கின்றது.
2.3.1.21.மேட்டுப்பாளையம்சிவண்ணா வீரப்பன் ஆட்களைப் பிரிந்து சென்று மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் சரணடைகிறான்.
2.3.2.கொல்லி மலை மலையாளிகள் தொடர்பு கொள்கின்ற பிற ஊர்கள் கீழ்வருமாறு அமைகின்றன.
2.3.2.1.நரியாங் கெணறுகால்நடைகளின் மேய்ச்சலுக்கு உரிய நீர் மடுவுகளில் வற்றிய தருணங்களில் நரியாங்கெணறு என்ற பகுதியிலுள்ள ஊத்து நீருக்கு வருகிறார்கள்.
2.3.2.2.சக்கரப்பட்டிபிரசவ வேதனையைப் பொறுக்க முடியாத பொன்னம்மாள் தான் சக்கரப்பட்டி வாலிபருடன் தொடர்பு கொண்ட உண்மையை மருத்துவச்சி  திருமியிடம் ஒப்புக்கொள்கிறாள்.
2.3.2.3.இலங்கைசிலோன் சீரங்கன் என்ற மலையாளி இலங்கையில் தேயிலை தோட்டத் தொழிலாளியாகப் பணி செய்து மலைக்கு திரும்பியிருக்கிறான்.
2.3.2.4.பூங்குளம்சாவித்திருமனின் மகள் பிடாரி பூங்குளத்து சக்கரவர்த்தி கருமன் என்பவனை மணந்துகொள்கிறாள்.
2.3.2.5.சேலம்  –  மலையில் சங்கம் உருவாக்குவதற்காகப் பொதுவுடைமைக் கட்சியின் சங்க அலுவலகத் தலைவரை சீரங்கனும் சடையனும் தொடர்புகொள்கிறார்கள்.
2.3.2.6.கெராங்காடு பட்டிகீழ்நாட்டுக்கார கந்துவட்டிக்காரர்கள் கெராங்காடு பட்டி மைதானத்தில்தான் மலையாளிகளிடம் புளியங்கா தண்டத்தை கூடுதலாகக் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.
2.3.2.7.வலப்பூருகந்துவட்டிக் காரனுக்குப் பணம் கொடுக்க முடியாத நிலையில் வலப்பூரு தொரையனின் வீட்டுப் பெண்ணை வசூல்காரன் சுக்ரபள்ளன் அழைத்துச் செல்ல முயன்றிருக்கிறான். சங்கம் மலையாளிடம் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தால் மலையாளிகள் ஒற்றுமையாக இணைந்து அவனை விரட்டியிருக்கிறார்கள்.
2.3.3.மரகரமலை ஹட்டியிலுள்ள படகர்கள் தொடர்பு கொள்கின்ற பிற ஊர்கள் கீழ்வருமாறு அமைகின்றன.
2.3.3.1.மொட்ட மலை, புலிக்குன்று ஆகிய பகுதிகளைக் கடந்துதான் ஒத்தை நகருக்குச் செல்ல முடியும் என்பதை ரங்கன் கேள்விப்பட்டிருக்கிறான்.
2.3.3.2.கோயம்புத்தூர், பொள்ளாச்சி போன்ற ஊர்களிலிருந்து வந்தவர்கள் விவசாயக் கூலிகளாக கரியமல்லரின் தேயிலைத் தோட்டத்தில் பணிசெய்கிறார்கள்.
2.3.3.3.மணிக்கல் ஹட்டிகிருஷ்ணன் பிறந்த ஊர்.
2.3.3.4.கீழ்மலைபாருவின் தாய்க்குப் பிறந்த ஊர். கிருஷ்ணன் படிக்கும் மிஷன் பள்ளி கீழ்மலையில்தான் இருக்கின்றது.
2.3.3.5.சின்னக் கொம்பைமணியகாரர் கரியமல்லருக்கு கட்டுப்பட்டுள்ள ஊர்களில் சின்னக்கொம்பையும் ஒன்று.
2.3.3.6.மூக்கு மலை –  ஜோகியின் மாமன் வீடு மூக்குமலையில் இருக்கின்றது.
2.3.3.7.தொதவர் மந்துமரகதமலையிலிருந்து ரங்கன் ஒத்தை நகருக்கு ஓடிய போது தொதவர்கள் வாழ்கின்ற தொதவர் மந்துவில் ஓர் இரவு அடைக்கலம் அடைந்தான். தொதவர்கள் ஊர் என்பதனை மந்து என்று அழைக்கிறார்கள்.
2.3.3.8.ஒத்தைமரகத மலையிலிருந்து ரங்கன் ஒத்தை நகருக்கு ஓடிவந்து நகரவாசியாக மாறுகிறான்.
2.3.3.9.வண்டுசோலைஒத்தையில் காய்வியாபாரியாகவும் மேஜர் துரை பங்களாவின் ஊழியர்களுக்கு மேற்பார்வையாளராகவும் இருக்கின்ற சுப்புப் பிள்ளையின் வீடு வண்டுசோலையில்தான் இருக்கின்றது. இவனிடம்தான் ரங்கன் பணியில் சேர்கிறான்.
2.3.3.10.ஒஸஹட்டிரங்கனுடைய சிற்றன்னையின் மகளாகிய ரங்கியை ஒஸஹட்டியிலிருந்து வந்தவன் திருமணம் செய்திருக்கிறான்.
2.3.3.11.தேன்மலைகிருஷ்ணனின் மனைவியாகிய ருக்மணி பிறந்த ஊர்.
2.3.3.12.உதகைஉதகை ஆனந்த கிரியிலுள்ள ஹில்வ்யூ மாளிகையில் கிருஷ்ண கௌடரின் மருமகள் ஆண்குழந்தை பெற்ற மகிழ்ச்சியை குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார்கள்.
2.3.3.13.பழனிபாருவின் வளர்ப்பு மகன் நஞ்சனுக்கும் கிருஷ்ண கௌடரின் பேத்தி  விஜயாவுக்கும் திருமணம் பழனி கோயிலில் நிகழ்கின்றது.
2.3.4.தாணிக்கண்டி என்ற மலையடிவார கிராமத்திலுள்ள இருளர்கள் தொடர்பு கொள்கின்ற பிற ஊர்கள் கீழ்வருமாறு அமைகின்றன.
2.3.4.1.பூண்டிவெள்ளியங்கிரி மலையேற வருகின்ற கவுண்டனாகிய ரங்கராஜனின் குடும்பத்தை இருளர் இனத்தைச் சார்ந்த மருதன் சந்தித்து நட்பு பாராட்டுகின்ற இடம்.
2.3.4.2.முட்டத்து வயல்நீலி மற்றும் ராசி வாய்க்கால்களை வெட்டி உருவாக்கிய இருளச் சகோதரிகளின்  ஊராகும்.
2.3.4.3.காரமடை - பொன்னான் என்கின்ற இருளப்பூசாரியிடம் தன் மகளுக்குப் பேயோட்டுவதற்காக அழைத்துவந்த தங்கவேலுவின் வீடு அமைந்துள்ள ஊர்.
2.3.4.4.ஆலாந்துறைபொன்னி பூப்பெய்ததற்காக ஆலாந்துறையிலிருந்து பாவாடை தாவணி வாங்கிவருகிறார்கள்.
2.3.4.5.பிற ஊர்கள் - இருளனாகிய மருதன் தாணிக்கண்டியில் இறந்தபோது அட்டப்பாடி, ஆனகட்டி, கூக்கம் பள்ளம், கோட்டத்துறை, போரத்தி, சர்க்கார் போரத்தி, வெள்ளப்பதி, பொட்டப்பதி, சீங்கப்பதி, சாடிவயல் ஆகிய இருளர் வாழ்கின்ற ஊர்களுக்கு இறப்புச் செய்தியைச் சொல்லி அனுப்புகிறார்கள். இருளர்கள் ஊர் என்பதனைப் பதிஎன்று அழைக்கிறார்கள்.
2.3.5.பழமரத்துப்பட்டி என்ற மலையடிவார கிராமத்திலுள்ள இருளர்கள் தொடர்பு கொள்கின்ற பிற ஊர்கள் கீழ்வருமாறு அமைகின்றன.
2.3.5.1.அத்தானூர்தேன்கனிக்கோட்டை ஏரியிலிருந்து மூன்று மைல் தூரம் கடந்து அத்தானூர் இருக்கின்றது. இந்த ஊரில்தான் லட்சுமையாவின் வீடு இருக்கின்றது.
2.3.5.2.நாற்றாப்பாளையம்கடவுளின் ஆற்றலுள்ள வனமாக நம்பப்படுகின்ற தேவர்காடு இங்குதான் உள்ளது.
2.3.5.3.பிற ஊர்கள் - நிலப்பிரபுத்துவ சமூக அதிகாரத்திற்கு எதிரான பொதுவுடைமை இயக்க செயலாளர்களின் செயல் திட்டங்களில் மலையடிவார கிராம மக்கள் அனைவரது வாழ்கையும் இணைந்திருக்கின்றது. தேன்கனிக்கோட்டை, தளி, ஓசூர், பழமரத்துப்பட்டி, சந்தானபுரம், அஞ்செட்டி, நாற்றாப்பாளையம், வரதனூர், சின்ன உப்பனூர், திப்ப சமுத்திரம், இராயக்கோட்டை, கமலாபுரம், பிக்கப்பள்ளி, நெல்லுமார், கேரட்டி, உரிகம், தக்கட்டி, கோட்டையூர், மஞ்சு கொண்டப்பள்ளி, மஞ்சு, கொடகரை, பெட்டமுகலாளம், தொளாமலை, மோட்ராகி, கஸ்தூர்பேல்பட்டி, அர்த்தக்கல், நூரொந்துசாமி மலை, ஓதிபுரம், பயில்காட, அத்திநத்தம், மாடக்கல், செப்புகுட்ட, புதூர், அட்டப்பள்ளம், கெலமங்கலம், சூலகிரி ஆகிய ஊர்களோடு பொதுவுடைமை இயக்கத்தினர் தொடர்புகொண்டு செயல்படுகின்றனர்.
2.4.வீடுகள்
2.4.1.குடிசை சோளகர்கள் குடிசை வீடுகளை அமைத்து வாழ்கிறார்கள். மூங்கில் தப்பைகளைப் படலாய் பிணைத்து அதில் செம்மண் பூசிய  சுவர்களுடன் நிறுத்தப்பட்டிருப்பதாக குடிசைகள் அமைந்திருக்கின்றன. சிவண்ணாவின் காவலை மீறி கொம்பன் யானை உள்ளே வந்ததும் தனது குடிசை யானையின் சின்ன உரசலைக்கூட தாங்காமல் உடைந்துவிடும் என அஞ்சுகின்றான். அந்த அளவிற்கு குடிசைகள் எளிமையாகவும் பலவீனமாகவும் இருக்கின்றன. (பாலமுருகன்,.2013: 5-6).
          கொல்லிமலை மலையாளிகளின் குடிசைகள் புல்லால் வேயப்பட்டிருக்கின்றன. மழை ஈரம் பட்டுப்பட்டு சாம்பல் நிறம் பூத்ததாகக் காணப்படுகின்றது. ஒட்டுத்திண்ணையுடையதாக அந்தக் குடிசைகள் இருக்கின்றன. பனிக்குளிரை எதிர்கொள்வதற்கு ஏற்றமுறையில் எரவானத்துக் கூரைகள் மிகவும் தாழ்வாக அமைக்கப்பட்டிருக்கின்றன. பனிக்காலங்களில் வீடுகளுக்குள் அட்டுப்பால் சொட்டியிருக்கும். அட்டுப்பால் என்பது சமையல் அடுப்பின் நீராவியும், பனித்துளிகளும், குடிசையில் படிந்திருக்கும் அழுக்கும் கலந்து மேலிருந்து சொட்டுகின்ற திரவமாகும். (சின்னப்ப பாரதி,கு. 2008: 59).
2.4.2.ஓடுகள்படகர்கள் ஓடுகள் வேய்ந்த வீடுகளில் வாழ்கிறார்கள். காரை பூசிய சுவர்களால் அந்த வீடுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வீடுகளின் வாயில்கள் தாழ்வாகவும் குறுகியதாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. வாயிலைக் கடந்து வராந்தா என்ற பகுதி இருக்கின்றது. வீடுகளின் வராந்தாவைக் ஒட்டி  இரண்டு மனைகள் இருக்கின்றன. வெளியே இருப்பது வெளிமனை ஆகும். உள்ளே இருப்பது உள்மனை ஆகும். உள்மனையின் வாயிலிலிருந்து நேர் வளைவில் சமையல் பகுதி இருக்கின்றது. உள்மனை வாயிலில் இருந்து வலது ஓரத்தில் பால்மனை அல்லது பூசை அறை இருக்கின்றது. சமையலறைக்கும் உள்மனைக்கும் இடையிலான சுவர்த் தண்டில் தீபமாடம் இருக்கின்றது. தீபமாடத்திற்கு மேலாக பொருட்களை சேகரித்து வைக்கின்ற மூங்கில் பரண்கள் இருக்கின்றன. (ராஜம் கிருஷ்ணன். 2001: 32-33).
2.4.3.தொதவர் குடிசைமரகதமலையிலிருந்து ஒத்தை நகருக்குச் செல்கின்ற வழியில் தொதவர்கள் வாழ்கின்ற தொதவர் மந்து இருக்கின்றது. தொதவர்களின் குடிசைகள் கணக் எனும் புல் வகையால் வேயப்பட்டிருக்கின்றன. அந்தக் குடிசைகளின் வாயில்கள் குறுகிய பொந்து வடிவில் இருக்கின்றன. (ராஜம் கிருஷ்ணன். 2001: 72-73).
2.4.4.மாடி வீடுகள்மரகத மலையில் தேயிலைகளைப் பயிர் செய்து பணக்காராகிய கரியமல்லரின் வீடு நீளத்திலும் அகலத்திலும் பெரிதாக அமைந்து சகல வசதிகளையும் உள்ளடக்கிய மாடிவீடுகளாக அமைக்கப்பெற்றிருக்கின்றன.
2.4.5.இருளர்களின் குடியிருப்பு - வெள்ளியங்கிரி மலையடிவாரம் தாணிக்கண்டியில் மக்கள் வாழ்கின்ற வீடுகள் வனத்துறையால் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. அவை அழகாகவும் வரிசையாகவும் அமைந்திருக்கின்றன. (ஆட்டனத்தி. 2010: 26).
தேன்கனிக்கோட்டையில் உரிகம், தக்கட்டி, கோட்டையூர், மஞ்சு கொண்டப்பள்ளி போன்ற மலைக்கிராமங்களின் மக்கள் மூங்கிலாலான வீடுகளைக் கட்டிக்கொள்கிறார்கள். (நஞ்சப்பன்,. 2007: 133).
இருளர்களின் வீடுகள் பற்றிய விவரங்கள் புதினங்களில் செறிவாக இடம்பெறவில்லை.
2.5.நீர்நிலைகள்
2.5.1.பாறைக் குழி குட்டை - சோளகர் தொட்டியின் வன எல்லைக்கு அருகே இருக்கின்ற தண்ணீர் குட்டையை பாறை குழி குட்டை என்கிறார்கள். மழைக்காலத்தில் வனத்திலிருந்து நீர் வடிந்து அந்தப் பாறைகுழியில் தேங்கியிருக்கும். அந்தக்குட்டையில் கடும் வறட்சியில்கூட நீர் வற்றாமல் இருக்கும். வனவிலங்குகளும் தண்ணீர் குடிக்க அங்கு வருவதுண்டு.
2.5.2.சீர்காட்டுக் கிணறுபேதனுக்குச் சொந்தமாகிய சீர்காட்டில் ஒரு கிணறு இருக்கின்றது. அந்தக் கிணற்றில் அணையைப் போல தண்ணீர் பெருக்கெடுத்திருக்கும். எல்லாக் காலங்களிலும் அந்தக் கிணற்றில் நீர் நிறைந்திருக்கும். நீர் இடி விழுந்ததன் காரணமாக இந்தக் கிணறு வற்றாத கிணறாகத் திகழ்கிறது என்று சொல்கிறார்கள்.
2.5.3.தண்ணீர்த் தொட்டி -  குடிசைகளின் பின்புறமாக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வீட்டிற்குத் தேவையான நீரை அதில் நிரப்பி வைத்துக்கொண்டு பயன்படுத்துகிறார்கள்
2.5.4.சுனை நீர் மடுவு -  கானகம் வழியாக சோளகணை செல்லும் வழியில் சுனைநீர் மடுவு இருக்கின்றது. பெரும் பாறைகளின் நடுவே கசிந்து வருகின்ற நீரானது சிறிய  பள்ளத்தில் தேங்கி வழிந்துகொண்டு இருக்கின்றது. இந்தச் சுனைநீர் மடுவில் வறட்சிக் காலங்களில்கூட நீர் வற்றாமலிருப்பதால் விலங்குகள் வந்து தாகம் தீர்த்துக்கொள்கின்றன. மடுவை சுற்றிலும் வனவிலங்குகளின் அடையாளமாக அவற்றின் சாணங்கள் இருக்கின்றன.
2.5.5.ஊத்துபூமிக்கடியில் இருந்து நீர் ஊறி வரும் பகுதியை ஊத்து நீர் என்பர். நரியாங் கெணறு என்ற பகுதியில் ஊத்து நீர் இருக்கிறது. வறட்சி காலத்தில் மலையாளிகள் தங்களது மாடுகளை நீரருந்தச் செய்ய இங்கு அழைத்துவருகிறார்கள்.
2.5.6.அருவிமரகத மலை ஹட்டியின் அருகில் அருவிக்கரை இருக்கின்றது. படகர்கள் நீரெடுக்க இந்த அருவிக்கரையைப் பயன்படுத்துகிறார்கள்.
2.5.7.குமரியாறுமணிக்கல் ஹட்டிக்கு வெளியில் வனத்திற்கு நடுவில் குமரியாறு என்னும் நதி ஓடுகிறது. கிருஷ்ணனும் பாருவும் காதல் நிமித்தமாக சந்திக்கின்ற பகுதி.
2.5.8.சிறுவாணிபூண்டியிலிருக்கின்ற வெள்ளியங்கிரி மலையானது மேற்குத்தொடர்ச்சி மலையுடன் இணைந்தருக்கின்றது. இந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கின்ற மடுவிலிருந்து சிறுவாணி நதி உற்பத்தியாகின்றது. கோயம்புத்தூர் மக்களின் முதன்மையான குடிநீர் ஆதாரமாகத் திகழ்கின்றது.
2.5.9.பாம்பாட்டி சுனைவெள்ளியங்கிரி மலையின் இரண்டாவது மலையில் பாம்பாட்டிச் சுனை இருக்கின்றது.
2.5.10.கைதட்டிச் சுனைவௌ்ளியங்கிரி மலையின் மூன்றாவது மலையில் கைதட்டிச் சுனை இருக்கின்றது.
2.5.11.ஆண்டி சுனை - வௌ்ளியங்கிரி மலையின் ஆறாவது மலையில் ஆண்டி சுனை இருக்கின்றது.
2.5.12.நீலி வாய்க்கால்ஆண்டி சுனையிலிருந்து உருவாகும் வாய்க்கால் மூன்று தடங்களை ஏற்படுத்தி ஓடுகிறது. 1.போரத்தி செட்டில்மென்டை சுற்றி ஓர் ஓடை ஓடுகிறது. 2. மேற்கே கேரளத்தை நோக்கி ஓர் ஓடை ஓடுகிறது. 3.தாணிக்கண்டியை நோக்கி ஓர் ஓடை ஓடுகின்றது. முட்டத்து வயல் ஊரின் மூப்பன் என்ற இருளனின் மகள் நீலியால் உருவாக்கப்பட்ட நீர் வழி என்பதால் நீலி வாய்க்கால் என்ற பெயரில் வெள்ளியங்கிரி மக்கள் குறிப்பிடுகிறார்கள்.
2.5.13.ராசி வாய்க்கால்முட்டத்து வயல் ஊரிலுள்ள மூப்பனது மகள் ராசியால் உருவாக்கப்பட்ட வாய்க்கால் என்பதால் ராசி வாய்க்கால் என்ற பெயரில் வெள்ளியங்கிரி மக்கள் குறிப்பிடுகிறார்கள்.
2.5.14.ஊமை மதகுஊமைப் பெண்ணை நரபலியிட்டு புதைத்து உருவாக்கிய ஏரியை ஊமை மதகு என்ற பெயரில் வெள்ளியங்கிரி மக்கள் அழைக்கிறார்கள்.
2.5.15.நொய்யல் ஆறுவெள்ளியங்கிரி மலையில் உற்பத்தியாகின்ற இந்த ஆறு  நொய்யல் என்று அழைக்கப்படுகின்றது. நெல் வயல்களின் வளமைக்கு இந்த ஆறு முக்கியக் காரணமாக இருக்கின்றது.
2.5.16.சின்னாறுகல்கொத்திப் பகுதியிலிருந்து உற்பத்தியாகி சாடிவயல் வழியாக ஓடுகின்ற ஆறு. தாண்டிக்கண்டி நஞ்சனின் மகள் பொன்னி நீலி வாய்க்காலில் குளிப்பதைவிட சின்னாற்றில் குளிப்பதையே மிகவும் விரும்புகிறாள்.
2.5.17.தேன்கனிக்கோட்டை ஏரிகுளிப்பதற்கும் குடிப்பதற்கும் மற்றும் அனைத்துக் காரியங்களுக்கும் தேன்கனிக்கோட்டையின் ஏரி பகுதி மக்கள் ஏரி நீரையே பயன்படுத்துகிறார்கள். உழுவு மாடுகளை விவசாயிகள் இந்த ஏரியில்தான் குளிக்கச் செய்கிறார்கள்.
2.5.18.தளி ஏரிதளி ஏரியிலிருந்துதான் சின்னாறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு ஒகேனக்கல் வரை ஓடி காவேரியில் கலக்கின்றது.
2.5.19.ஊற்று நீர்தேன்கனிக்கோட்டைப் பகுதியிலுள்ள மக்கள் வறட்சியின் காரணமாகக் காட்டாறுகளிலும், ஓடைகளிலும் மணலில் ஊற்று தோண்டி ஊற்றுநீரைப் பயன்படுத்துகிறார்கள்.
2.5.20.மலை ஓடைதளிப்பகுதியிலுள்ள ஒரு மலையின் அருகே ஓடுகின்ற ஓர் ஓடை ஆகும். தளியில் நிகழ்ந்துள்ள நிலவரங்களைப்பற்றி ரவியிடம் கதைகேட்டுக்கொண்டிருந்த கெம்பண்ணாவும் நரேந்திரனும் இந்த ஓடையில்தான் குளிக்கிறார்கள்.
2.5.21.தென்பெண்ணைகெலவரப்பள்ளி என்ற கிராமம் இந்த ஆற்றங்கரையில்தான் இருக்கின்றது.
2.6.வனம்
2.6.1.பாங்காடு - சோளகர்கள் தங்களுக்குத் தேவையான மூங்கில் போன்ற காட்டுப் பொருட்களைப் பெறுவதற்காக ஊரின் அருகிலுள்ள வனத்திற்குச் செல்கிறார்கள். ஊரிலிருந்து நெடுதூரமாக அல்லாமல் அருகாமையாக அமைந்துள்ள இந்த வனத்தைப் பாங்காடு என்று அழைக்கிறார்கள்.
2.6.2.ஊசிமலைகொத்தல்லி எட்டடி வேங்கையை இந்த இடத்தில்தான் எதிர்கொண்டு வீழ்த்தினார்.
2.6.3.கத்திரி மலைஜோகம்மாளின் தாத்தா இந்த மலையில் இரண்டு புலிகளைக் கொன்றிருப்பதாகத் தந்தை சொல்லக் கேட்டிருக்கிறாள்.
2.6.4. கரடிப்பாவிவனத்திலுள்ள கரடிப்பாவி என்ற பகுதியில் செங்குத்தான பாறையின் அடிப்பகுதியில் கட்டப்பட்டிருந்த தேன்கூட்டிலிருந்து சிவண்ணா தேனெடுத்தான்.
2.6.5. தோனிமடுவுவனத்திலுள்ள தோனி மடுவு என்ற பகுதியிலுள்ள புளியமரத்தில் ஏறி சிவண்ணா தேனெடுக்க முயற்சி செய்தபோது சந்தனக்கடத்தல் வீரப்பனது ஆட்கள் துப்பாக்கிகளுடன் செல்வதைக் கவனிக்கிறான். இப்பகுதியில் சந்தன மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.
2.6.6. சீமாற்று புல்வெளிவனத்தில் தோனிமடுவுக்குப் போகும் வழியில் சீமாற்று புல் வெளி இருக்கின்றது. ஆட்களை மறைத்துவிடுமளவிற்கு அந்தப் புற்கள் மிக உயரமாக வளர்ந்திருக்கின்றன. இதனைப் போளி என்று அழைக்கிறார்கள்.
2.6.7. லண்டானா புதர்வெள்ளியங்கிரி மலையடிவாரங்களிலுள்ள வனங்களில் லண்டானா எனும் ஒரு வகையான புதர்கள் இருக்கின்றன.
2.6.8.அடர்த்தியான தாணி மரங்கள்ஆணை சுனையிலிருந்து தாணிக்கண்டி நோக்கி வருகின்ற ஓடையானது இருமருங்கிலும் அடர்த்தியான தாணிமரங்கள் அமைந்திருக்கின்றன.
2.6.9.மேற்குதொடர்ச்சி மலைகள்வெள்ளியங்கிரி மலையானது மேற்குத்தொடர்ச்சி மலையின் அங்கமாக இருக்கின்றது.
2.6.10.வெள்ளியங்கிரியில் முதல்மலை - வெள்ளிவிநாயகர் கோயில் அமைக்கப்பெற்றிருக்கின்றது.
2.6.11.வெள்ளியங்கிரியில் இரண்டாம் மலை - பாம்பாட்டிச் சுனை இருக்கின்றது.
2.6.12.வெள்ளியங்கிரியில் மூன்றாம் மலைகைதட்டிச்சுனை இருக்கின்றது.
2.6.13.வெள்ளியங்கிரியில் நான்காம் மலை - ஒட்டர் சித்தர் சமாதி இருக்கின்றது.
2.6.14.வெள்ளியங்கிரியில் ஐந்தாம் மலை - பீமன் களியுருண்டை மலை என்று அழைக்கப்படுகின்றது.
2.6.15.வெள்ளியங்கிரியில் ஆறாம் மலைசேத்திழைக்குகை, ஆண்டிசுனை இருக்கின்றன
2.6.16.வெள்ளியங்கிரியில் ஏழாம் மலைசுயம்புலிங்கம் இருக்கின்றது
2.6.17.வைதேகிவனத்தில் வைதேகி என்றொரு பகுதி இருக்கின்றது. இந்தப் பகுதியில் தீப்பிடித்த காரணத்தினால் தீயணைப்பதற்காக வனத்துறையினர் தாணிக்கண்டி மக்களை அழைத்துச் செல்கிறார்கள்.
2.6.18.தேவர்காடுநாற்றாப்பாளையத்தில் இருக்கின்ற ஒரு வனப்பகுதி. கடவுளின் ஆற்றலுள்ள வனப்பகுதியாக தேவர் காடு நம்பப்படுகிறது.
2.6.19.நீலகிரி தோப்புஉயரமான தைலமரங்கள் நிறைந்த நீலகிரி தோப்பில் கூடி பண்ணையார் கோவிந்தரெட்டியை பலிவாங்குவதற்கான திட்டம் பற்றி இளைஞர்கள் முடிவெடுக்கிறார்கள்.
2.6.20.வனம் பற்றிய பிற செய்திகள் - படகர்கள் வாழ்கின்ற மரகதமலையிலுள்ள வனங்களில் கற்பூர விருட்சங்கள் என்று அழைக்கப்படுகின்ற தைல மரங்களின் வாசம் பரவியிருக்கின்றன. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கின்ற குறிஞ்சிப் பூக்கள் பூத்திருக்கின்றன.
2.7.வன உயிரினங்கள்
            ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஐந்து புதினங்களில் இடம்பெறும் விலங்குகள், மற்ற உயிரினங்கள் பற்றி இப்பகுதியில் காணலாம்.
2.7.1.விலங்குகள்
2.7.1.1.யானை - வனத்திலிருந்து யானைகள் மூங்கில் குறுத்துக்களை தேடிவருகையில்  விளைநிலங்களுக்கும் வந்துவிடுகின்றனபடகல் மாதேஸ்வரன் கோயிலுக்கு செல்கின்ற வன வழியில் ஒரு கொம்பன் யானை இறந்து கிடந்தது. தந்தத்திற்காகச் சுடப்பட்ட அந்த யானை தப்பித்துவந்து இறந்திருக்கிறது. வனத்துறையினர் வந்து தந்தத்தை அறுத்துச் சென்றுள்ளார்கள் என்று ஒரு சோளகணைக்காரன் விளக்குகிறான். தாணிக்கண்டிக் காரர்கள் வனத்தில் புளி சேகரித்துக் கொண்டிருந்த நேரத்தில் காட்டு யானையிடம் சிக்கிக்கொள்கிறார்கள். ரங்கராஜனை பொன்னி காப்பாற்றி விடுகிறாள். ஆனால் காட்டு யானையால் தூக்கி வீசப்பட்ட பொன்னி மருத்துவப் பலனின்றி இறந்துபோகிறாள். தளியிலுள்ள மலை ஓடையில் யானைகள் கூட்டங்கூட்டமாக வந்து சென்றுள்ளதற்கான அடையாளங்கள் இருக்கின்றன.           நாற்றாம்பாளையம் வனத்தில் மக்களிடமிருந்து தப்பி வனத்திற்குள் ஓடிய மூன்று காட்டுக்கொள்ளையர்கள் யானைகளால் கொல்லப்படுகிறார்கள்.      மலையாளிகள் படகர்கள் பற்றிய புதினங்களில் யானைகள் பற்றிய தகவல்கள் இல்லை.
2.7.1.2.வேங்கைகொத்தல்லி என்பவர் கூட்டாளிகளோடு ஊசிமலைப் பக்கம் சென்று கொண்டிருந்தபோது எட்டடி வேங்கையை எதிர்கொண்டு வீழ்த்துகிறார். மலையாளிகள், படகர்கள், இருளர்கள் பற்றிய புதினங்களில் வேங்கை பற்றிய செய்திகள் இல்லை.
2.7.1.3.         கரடிகொத்தல்லியின் மூத்தமகன் கரடியால் தாக்கப்பட்டு மருத்துவப் பலனின்றி இறந்துபோகிறார். சிக்குமாதா தன்னைத் தாக்க வந்த கரடியைச் சுட்டுக் கொல்கிறார். மலையாளிகள், படகர்கள், இருளர்கள் பற்றிய புதினங்களில் கரடி பற்றிய செய்திகள் இல்லை.
2.7.1.4.மான்பாறைக்குழி குட்டையில் தண்ணீர் குடிக்க வந்த மான்களில் ஒன்றை வேட்டைநாய்களின் உதவியுடன் சிவண்ணா வேட்டையாடுகிறான். படகர்களின் விவசாய விளைச்சல்களை மான்கள் இரவில் வந்து உண்கின்றன. சிக்குமாதா ஒருமுறை கடமான் ஒன்றை வனத்தில் மூன்று மைல்வரை விரட்டிச்சென்று வேட்டையாட முயன்றிருக்கிறார். செந்நாயால் வேட்டையாடப்பட்ட கடமான் ஒன்று உயிர் தப்பி தாணிக்கண்டி அருகே வந்துவிடுகின்றது. தாணிக்கண்டி மக்கள் வனத்துறைக்குத் தெரியாமல் ரகசியமாக அடித்து உண்டுவிடுகிறார்கள். மலையாளிகள், தேன்கனிக்கோட்டைப் பகுதி இருளர்கள் பற்றிய புதினங்களில் மான்களைப் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.1.5.காட்டெருமை - காட்டுத்தீ பரவியிருந்தபோது இரண்டு காட்டெருமைகள் தொட்டியின் வனத்தையொட்டியிருந்த பாறைகுழி குட்டையில் நின்றுகொண்டிருந்தன. மலையாளிகள், படகர்கள், இருளர்கள் பற்றிய புதினங்களில் காட்டெருமை பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.1.6.புலிபுலியைச் சோளகர்கள் பெருநரி என்று அழைக்கிறார்கள். கத்திரிமலையில் இரண்டு பெருநரியை ஜோகம்மாளின் தாத்தா கொன்றிருக்கிறார்.         மலைக்கு வந்து காடழிச்சு விவசாயம் செய்த கவுண்டனது மாட்டை ஒரு மிருகம் வேட்டையாடி பாதி உடலை விட்டுவைத்திருக்கிறது. அவன் அந்த உடலில் பூச்சி மருந்தை பரப்பி வைத்துள்ளான். புலி அந்த விசம் பரப்பப்பட்டுள்ள மாமிசத்தை உண்டு இறந்துபோனது. புலியின் இறந்த உடலை ஊரார் வேடிக்கைப் பார்க்கிறார்கள். கீழ்நாட்டுக்காரங்க விவசாயம் செய்ய ஆரம்பித்த பிறகு இதுபோல புலிகள் ஏராளமாக விசம் வைத்துக் கொல்லப்பட்டதாக ஜோகம்மாள் கூறுகிறாள்.   மரகதமலை ஹட்டியின் அருவிக்கரை அருகில் மருத்துவப் பராமரிப்பிலிருந்த கால் முறிந்த எருமையைப் புலி வேட்டையாடி உண்டது. மலையாளிகள், இருளர்கள் பற்றிய புதினங்களில் புலி பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.1.7.சிறுத்தைபாங்காட்டில் பூனைபோல சிறுத்தை அதிகம் திரிகின்றதை ரதி பார்த்திருக்கிறாள். ஜடைசாமி கோயிலுக்குச் சென்றபோது ஆட்களைக் கண்ட சிறுத்தை மரத்திலிருந்து குதித்து புதருக்குள் ஓடியதைப் பார்த்த அனுபவத்தைச் சொல்கிறாள். மலையாளிகள், படகர்கள், இருளர்கள் பற்றிய புதினங்களில் சிறுத்தை பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.1.8.காட்டுப்பன்றிசிக்குமாதா இரவில் காட்டுப்பன்றிகளை வேட்டையாட விரட்டிச்சென்றபோது யானை தாக்கி மருத்துவப்பலனின்றி உயிரிழக்கிறான். தேன்கனிக்கோட்டையின் ஏரிப்பகுதியில் கொட்டிக் கிழங்குகளைப் பன்றிகள் மூக்கால் அகழ்ந்து திண்கின்றன. காட்டு்ப்பன்றிகளை கோணவாயன் என்று அழைக்கிறார்கள். பயிர்களைக் காவல் செய்கின்ற கொல்லைக் காவலர்கள் கோணவாயன் கூட்டமாக வருவதாக எச்சரிக்கிறார்கள். மலையாளிகள், படகர்கள், தாணிக்கண்டி இருளர்கள் பற்றிய புதினங்களில் காட்டுப்பன்றி பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.1.9.நரிதொரிய மல்லனுடன் லிங்கையா காவல் பரணுக்குச் செல்லும்போது கூட்டமாக நரிகள் ஊளையிடுகின்றன. வளர்ப்புக் கோழியை நரி பிடித்துச் சென்ற செய்தியை மல்லன் சொல்கிறான். சோளகர்கள், மலையாளிகள், தாணிக்கண்டி இருளர்கள் பற்றிய புதினங்களில் நரி பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.1.10.செந்நாய்கடமானை வேட்டையாடிய செந்நாயைத் தாணிக்கண்டி மக்கள் கவனித்துவிடுகிறார்கள். செந்நாயிடம் இருந்து தங்களுடைய மாடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற செய்தியை எச்சரிக்கை உணர்வுடன் பேசிக்கொள்கிறார்கள். சோளகர்கள், மலையாளிகள், தேன்கனிக்கோட்டை இருளர்கள் பற்றிய புதினங்களில் செந்நாய் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.1.11.குரங்குகள்பூண்டி கோயிலின் முன்பாகப் புளியமரங்களில் குரங்குகள் சேட்டை செய்கின்றன. தேன்கனிக்கோட்டை ஏரியிலுள்ள புளியமரத்தில் குரங்குகள் தாவிக்குதித்துக் கொண்டும் சண்டை போட்டுக்கொண்டும் இருக்கின்றன. சோளகர்கள், மலையாளிகள், படகர்கள் பற்றிய புதினங்களில் குரங்குகள் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.2.பறவைகள்
2.7.2.1.செம்பூத்துப் பறவைகள்சோளகணை செல்வதற்கான வன வழியில் சற்று ஓய்வாக அமர்ந்த போது ஜோகம்மாள், ரதி, மல்லி ஆகியோர் ஓடையின் கரையில் இரண்டு செம்பூத்துப் பறவைகள் ஓடுவதைப் பார்க்கிறார்கள். பேதனுடன் படகல் மாதேஸ்வரன் கோயிலுக்கு படையல் வைக்க வந்தபோது செம்பூத்துப் பறவைகள் கூட்டமாக இருந்தனபடையலுக்குரிய தானியங்களை பேதன் கொஞ்சம் கைகளில் எடுத்து வைத்ததும் அந்தப் பறவைகள் கொத்தித் தின்று ஓடின. மலையாளிகள் பற்றிய புதினத்தில் செறிவானத் தகவல்கள் இல்லை. படகர்கள், இருளர்கள் பற்றிய புதினங்களில் செம்பூத்துப் பறவை பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.2.2.காட்டுக் கோழிகள்சோளகணை செல்வதற்கான வன வழியில் சற்று ஓய்வாக அமர்ந்த போது ஜோகம்மாள், ரதி, மல்லி ஆகியோர் காட்டுக் கோழிகளின் சத்தங்களைக் கேட்கிறார்கள். மலையாளிகள், படகர்கள், இருளர்கள் பற்றிய புதினங்களில் காட்டுக்கோழிகள் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.2.3.சிட்டுக்குருவிகள்சிவண்ணாவின் வீட்டிற்கு மாதி மனைவியாக வந்ததும் ராகியை இரண்டு கைகளிலும் அள்ளி வாசலில் விசிறுகிறாள். சிட்டுக்குருவிகள் பறந்துவந்து அவற்றைக் கொத்தித் தின்கின்றன. மலையாளிகள், படகர்கள், இருளர்கள் பற்றிய புதினங்களில் சிட்டுக்குருவிகள் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.2.4.கௌதாரிஅரசமரத்திலுள்ள பிசினில் கால்கள் மாட்டிக்கொண்ட கௌதாரியை ரதி மரத்திலேறி பிடிக்கிறாள். மலையாளிகள், படகர்கள், இருளர்கள் பற்றிய புதினங்களில் கௌதாரி பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.2.5.மலைக் கழுகுநாற்றாம் பாளையம் வனப்பகுதியில் தந்தத்திற்காக கொல்லப்பட்ட இரண்டு யானைகளின் இறைச்சிகளை உண்ட மலைக்கழுகுகள் யானைகளின் வயிற்றிலிருந்து வெளிவந்து வட்டமிட்டுப் பறக்கின்றன. சோளகர்கள், மலையாளிகள், படகர்கள், தாணிக்கண்டி இருளர்கள் பற்றிய புதினங்களில் மலைக்கழுகு பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.2.6.ஆள்காட்டிக் குருவிபழமரத்துப்பட்டியில் வாழ்கின்ற மக்கள் சாஸ்திரக்குருவி என்று அழைக்கிறார்கள். பண்ணையார் கோவிந்த ரெட்டியாரின் சித்திரவதைகளுக்கு ஆளானவர்களை தேன்கனிக்கோட்டைக்கு தூக்கிச் செல்கின்றபோது இந்தக் குருவியின் சப்தத்தை கேட்டு சகுனம் பார்க்கிறார்கள். சோளகர்கள், மலையாளிகள், படகர்கள், தாணிக்கண்டி இருளர்கள் பற்றிய புதினங்களில் ஆள்காட்டிக்குருவி பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.3.ஊர்வன
2.7.3.1.எறும்புத் திண்ணிஜோகம்மாள் மகள் ரதியுடன் படகல் மாதேஸ்வரன் கோயிலுக்கு கானகம் வழியே சென்றபோது  மரத்திலிருந்த எறும்புக் கூடுகளை அழித்துவிட்டு இறங்கிவருகின்ற எறும்புத்திண்ணியைப் பார்க்கிறார்கள். மலையாளிகள், படகர்கள், இருளர்கள் பற்றிய புதினங்களில் எறும்புத்திண்ணி பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.3.2.         மலைப்பாம்புகோடைக்காலம் உக்கிரமில்லாத பருவத்தில் கடத்தல்காரர்களால் உருவாக்கப்பட்டிருந்த காட்டுத்தீயில் நீளமான மலைப்பாம்பு கருகி இறந்திருந்ததைச் சோளகர்கள் பார்க்கின்றனர். மலையாளிகள், படகர்கள், இருளர்கள் பற்றிய புதினங்களில் மலைப்பாம்பு பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.3.3.கரு நாகம்இருளர்கள் பாம்பை மட்டை’ என்றும் அழைக்கிறார்கள். கூழைக்கிழவனும் நஞ்சன் மனைவியும் புளியமரக் காட்டைக் கடந்து பயணம் சென்றபோது கருநாகத்தை காணுகிறார்கள். சோளகர்கள், மலையாளிகள், படகர்கள், தேன்கனிக்கோட்டை இருளர்கள் பற்றிய புதினங்களில் மலைப்பாம்பு பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.3.4.முள்ளம்பன்றி - வனத்திலிருந்து படுகர்களின் விவசாயக் காடுகளின் விளைச்சல்களை உண்பதற்காக முள்ளம்பன்றிகள் வருகின்றன. சோளகர்கள், மலையாளிகள், இருளர்கள் பற்றிய புதினங்களில் முள்ளம்பன்றிகள் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.4.பூச்சிகள்
2.7.4.1.தேன் பூச்சிகள்கரடிப்பாவியிலுள்ள செங்குத்தான பாறையில் இறங்கி சிவண்ணா தேன் சேகரித்த போது குளவி போன்ற தேன் பூச்சிகள் பறக்கின்றன. தேன்கனிக்கோட்டை மலைகளில் வறட்சிக் காலத்தில் தேனிக்கள் உயிர்பிழைக்க வேறு பகுதிகளுக்குச் சென்றுவிடுவதால் மலைவாழ் பழங்குடிகளுக்குத் தேன் கிடைக்கவில்லை. மலையாளிகள், படகர்கள், தாணிக்கண்டி இருளர்கள் பற்றிய புதினங்களில் தேன் பூச்சிகள் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.5.வன உயிரினங்கள் பற்றிய பிற செய்திகள்

            செம்பூத்துப்பறவை, தொட்டரக்காக் குருவி, பீச்சிட்டாங்குருவி, கிசிரை போன்ற பறவைகள் கொல்லி மலையில் இருக்கின்றன. மலையாளிகள் இரவில் சந்தைக்குச் சுமையுடன் மலை பாதையில் செல்லும் போது தவளைகள், நீர் பாம்புகள், முள்ளம் பன்றிகள் ஆகியவற்றின் நடமாட்டத்தை உணர்கிறார்கள். கொல்லிமலையில் பெருதல வண்டு என்ற பூச்சியினம் இருக்கின்றது. நரிகள், ஆந்தை, கோட்டான் ஆகியவற்றின் சத்தங்கள் பழமரத்துப்பட்டிக்காரர்களுக்கு இரவு முழுதும் கேட்கின்றன. நீர்க்கோழிகளும், கானாங்கோழிகளும் தேன்கனிக்கோட்டை ஏரியில் காணப்படுகின்றன
... 

இயல் – 2 வாழ்விடங்களும் சமூகப்பொருளாதார உற்பத்தி உறவுகளும் 1

No comments:

அதிகம் படித்தவை