தட்டுங்கள் திருத்தப்படும்
புதியவன்
நெருப்புமழை பொழிகிறது…
எல்லாத் துளிகளிலும்
கருகிப்போன வாழ்க்கையின்
முனங்கள் சத்தம் கேட்கிறது…
எருமை மாட்டுக்கு
மழை பெய்தால்
சொரணை எப்படி தெரியும்?
நாம் எருமைகளாகவே வளர்ந்துவிட்டோம்!
கிரிக்கெட்டும் சினிமாவும்
கண்களை மேய்வதால்…
நம்மை சுற்றியுள்ள கங்குகளைப்
பூக்கள் என்கிறது நரிகள்…
நாமும் பூமிதிக்கிறோம்!
நமதுசமூகம் – அரசு – குடும்பம்
நம்மை எருமைகளாகவே வளர்த்துவிட்டன!
கடிவாளம் கட்டிய குதிரைகளாக
சொரணைக்கெட்ட எருமைகளாக
பிரச்சனைகளே தெரியாமல்
அடங்கிக் கிடக்கிறோமே…
இது யாருக்காக?
நமக்கும் சொரணை வருமென்றால்!
நெருப்புமழை பொழிகிறது…
குடைபிடிப்பது எப்பொழுது?...
No comments:
Post a Comment