எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Thursday, May 11, 2017

விதி-1 இயங்குதலின் நான்கு தன்மைகளை உணர்தல்

விதி-1        இயங்குதலின் நான்கு தன்மைகளை உணர்தல்
            இயங்குதல் என்பது இயங்கிக்கொண்டிருப்பது (Dialectical Philosophy). இதிலிருந்து அதுவரைக்கும் இயங்குதலே இருக்கின்றது. அதாவது, எட்ட முடியாத பொருளிலிருந்து எட்ட முடியாத காலம்வரை. நினைவிற்கு எட்டாத பொருட்களிலிருந்து நினைவிற்கு எட்டாத கருத்துக்கள்வரை. உலகம் எப்படியெல்லாம் தோன்றி வளர்ந்தது என்பதிலிருந்து எப்படியெல்லாம் மாறப்போகிறது என்பதுவரை. அனைத்தும் இயங்குதலே. இயங்குதல் என்பது ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறுதல். மாறுதல் என்ற செயல்பாடு முழுமையிலும் இயங்குதலே நடைபெறுகிறது.
            இயங்காது இருத்தல் என்று எதை சொல்வது? அப்படி எதையாவது நம்மால் சுட்ட முடியுமா? நிச்சயம் முடியாது அப்படிச் சுட்டினால், அதுவே இயங்குதல் பற்றிய அறியாமையாகும். ஏனெனில் இயங்குதலின் உண்மைகளை உணராதிருத்தல் என்பதே இயங்காதிருத்தலுக்கு அர்த்தம். ஆக, இயங்குதல் மட்டுமே இயங்குதல் ஆகும். இப்படியே முடித்துக்கொள்ள முடியாது. இயங்குதலின் நுனியைத்தான் இதுவரைப் பார்த்தோம். இனி இயங்குதலின் முழுமையைப் பார்க்க முயல்வோம்.
            இயங்குதல் என்பது திசைகளைப்போல. மனிதனது பார்வையின் போக்கை இயற்கை நான்கு திசைகளாக வரையறை செய்திருக்கிறது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு. இதுபோல இயங்குதல் தன்னை நான்கு தன்மைகளால் வரையறை செய்துள்ளது. இந்த நான்கை குறிப்பிடும்போது திடீரென்று நமக்குக் காரிருள் கவ்வலாம். சூரியன் ஓடி ஒளிந்ததுபோல தோன்றலாம். கவலையில்லை. விளக்கத்தில் நிச்சயம் வெளிச்சம் பிறக்கும்.
            இயங்குதலின் நான்கு தன்மைகள்
விதி-1.1        முரண்பாடுகளே இயங்குதலை நிகழ்த்துகின்றன.
விதி-1.2 முரண்பாட்டின் மோதல்களுக்குள் நிகழ்கின்ற அளவு மாற்றமும், பண்பு மாற்றமுமே இயங்குதலை நகர்த்துகின்றன.
விதி-1.3        பழைய நிலையை அழித்துக்கொண்டு புதிய நிலைக்கு மாறுதலும், புதிய நிலையை அழித்துக்கொண்டு வேறொரு நிலைக்கு ஓடுதலும் இயங்குதலின் இலக்காதல்.
விதி-1.4        இயங்குதல் தன் இலக்கை அடைதல் என்பது முன்பிருந்த நிலைக்கு திரும்பாமல் அந்நிலையைவிட உயர்ந்த நிலைக்கு மாறுதல் மட்டுமே.

            இப்பொழுது கண்கள் கட்டப்பட்டு நடுக்காட்டில் நிற்பதாக உணரலாம். தயக்கத்தைத் தவிர்த்துவிட்டு பக்குவமாய் நடப்போம். கண்கட்டு அவிழும் தூரம் அருகில்தான் உள்ளது. வெளிச்சத்தை உணரும்போது கட்டற்ற இன்பத்தை உறுதியாக அனுபவிப்போம். வியர்த்த உடலுடன் நிற்கின்ற உச்சி வெயில் உழைப்பாளரைத் தென்னந்தோப்பின் ஈரக்காற்று முத்தமிட்டால் எப்படியிருக்கும்! இத்தகைய ஓர் ஆனந்தத்தை நம் மூளை அனுபவிக்க வேண்டும். இத்தகைய உணர்வோடு தொடர்ந்து பயணிப்போம்.


No comments:

அதிகம் படித்தவை