எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Saturday, June 25, 2016

நாட்டின் முட்டைகள்




நாட்டின் முட்டைகள்
புதியவன்

நாட்டை கவ்வி இருக்கின்றன பாம்புகள்!
ஒவ்வொரு குடும்பத்தையும் அடுப்பாக்கி
நம்மை அவித்துத்திண்கின்றன...
சூடேறும் நீரில்
நூறு டிகிரி வெப்பத்தில்
வெடித்து சாவோமென
தவளைக்கு தெரிவதில்லை!
நாம் தவளைகளாக இருக்கின்றோம்...
தவளை போல தாவுவதால்
பாம்பு பயப்படப் போவதில்லை!
நாம் வாழ்ந்தாக வேண்டும்...
நாட்டுப்பற்றை அடக்கியிருக்கும்
அத்தனைக் குடும்பங்களையும் அடைகாப்போம்!

அதிகார ஓட்டினை உடைத்துக்கொண்டு
கழுகுகுஞ்சுகளாய் வீரஅழகுடன்
நாட்டுப்பற்று வெளிவரட்டும்

பாம்பிற்கு பலியாக
இனியும் நாம் தவளைகளல்ல
நம் கழுகு கரங்களில்
பாம்புகளின் கதை நிச்சயம் முடியும்!


வெளிவந்த விபரம்
http://vaarppu.com/view/2273/
கவிஞர் புதியவன் வார்த்தவை

அடையாள இலக்கம்: 548

No comments:

அதிகம் படித்தவை