காரணமானவர்களை
நினைத்து
இணையதளம், தொலைக்காட்சி, வானொலி மற்றும் பெருத்த சிறுத்த ஊடகங்களின் உலகப்பார்வையே சகமக்களின் உலகப்பார்வையாக இருக்கின்றன. சினிமாக்கள், சின்னத்திரைகள், விளம்பரங்கள், செய்திகள், உண்மைகளுக்கு எதிரான நேர்மையற்ற பொழுதழிப்பு நிகழ்ச்சிகள் போன்றவற்றின் கலவையான உலகப்பார்வைகளே சகமக்களுக்கு அறிவொளி போன்று ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றன. எதார்த்த வாழ்வின் உண்மைகளை அறிந்துணரும் ஆற்றல் இன்னும் மக்களுக்கு கைகூடவில்லை.
சதந்திரமான அறிவியல் பார்வையை ஏன் இன்னும் எட்ட இயலவில்லை? சுதந்திரம் என்பதன் அர்த்தம் தான்தோன்றித்தனம் என்பதல்ல. சுதந்திரம் என்பது சுயக்கட்டுப்பாடு. அறிவியல் உண்மைக்குக் கட்டுப்படுகின்ற உலகப்பார்வையை சகமக்களிடம் பலப்படுத்த வேண்டும். சகமக்களின் அறிவியல் உணர்வை வளர்த்தெடுப்பதும், அவர்களின் உலகப்பார்வையை சமூகவிஞ்ஞானப் பார்வையாக மெருகேற்றுவதும் சமூகவிஞ்ஞானிகளின் அதிமுக்கியக் கடமை.
உலகளாவிய வியாபாரப் பெருநிறுவனங்களின் பாராளமன்ற அதிகாரத்திலான ஊடகங்கள் என்ன செய்கின்றன? மோசடித்தனமான தகவல்களை செயற்கைகோள் உதவியுடன் நம் மூளைக்குள் வலிமையாகத் திணிக்கின்றன. இந்தச் சூழலில் நாம் சமூகவிஞ்ஞான நிலையிலிருந்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கடமை உணர்வோடு எழுத முயன்ற எனது முயற்சியை சிறு நூலாக மாற்றுதல் நோக்கி முறைபடுத்தியவர் அன்பு அண்ணன் பிரசன்னா (முகம் பதிப்பகம்). இன்று இச்சிறு நூல் சமூகவிஞ்ஞானிகளின் சிறு ஆயுதமாக விளங்க முடிகிறது. இதற்கு முழுமுதல் காரணம் இவரே. அண்ணன் பிரசன்னாவிற்கு அன்பார்ந்த நன்றி!
பார்வை நூல்களுக்கு வழிகாட்டி என் முயற்சியை பக்குவப்படுத்தி, பொறுப்போடும் அக்கறையோடும் இந்நூலைத் திருத்தம் செய்து, இறுதிபடுத்திய நெறியாளர், தோழர் காமராசு (முகம் பதிப்பகம்) அவர்களுக்கும், மேலும் முகம் பதிப்பகத்தார் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
எனது முயற்சியை அங்கீகரித்து படைப்புகளை வெளியிட்டு ஊக்கப்படுத்திய SUMS இன் சாளரம், காக்கைச் சிறகினிலே, புதுப்புனல், புதிய ஆசிரியர், மீண்டும் அகரம், புதிய கோடாங்கி, நற்றிணை, உங்கள் நூலகம் போன்ற சிற்றிதழ்களுக்கும் ஆய்விதழ்களாகிய புதிய பனுவலுக்கும் ஊடாட்டத்திற்கும் நன்றி!
முதல்முதலாக எழுதும் ஆற்றலை என்னிடத்தில் உணரச் செய்த நாட்டுப்பறவியல் அறிஞர் பேராசிரியர் இ.முத்தையா அவர்களுக்கு எனது மறக்க முடியாத நன்றி!
“எழுத்தாளனாக அங்கீகாரம் பெறுவீங்க சிவக்குமார்” என்று நம்பிக்கையோடு என்னை வாழ்த்தி ஊக்கப்படுத்திய தமிழ் மக்களின் மானிடவியல் அறிஞர் முனைவர் பக்தவத்சலபாரதி ஐயா அவர்களுக்கு பணிவன்புடன் நன்றி!
எனக்கு சமூகவிஞ்ஞானத்ததைக் கற்றுக் கொடுக்கின்ற தாயாகவும், செயலுக்கு வழிகாட்டுகின்ற விளக்காகவும் விளங்கிய பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்திற்கும், நான் சார்ந்திருக்கின்ற அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்திற்கும் (புதுச்சேரி) நன்றி!
நான் எழுதியதை வாசித்தும், விமர்சித்தும், திருத்தியும் என பல வகையில் ஒத்துழைத்து இச்சிறு நூலிற்குப் பங்காற்றியவர்களை நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளேன்…
உன் எழுத்திற்கு முதல் ரசிகை என்று கூறி மகிழ்கின்ற கே.ருக்மணி (என்னைப் பெற்றெடுத்தத் தாய்), தந்தை ச.கேசவன், அண்ணன் நாகராஜன், அண்ணி வினிபா, இணையள் சௌந்தரிசிவா.
என் தாய் தந்தைக்கு நிகராக புதுச்சேரியில் என்னை கவனித்துக் காக்கின்ற செ.கலைமணி, சா.செல்லப்பன்.
எனது இரவு நேர பாதுகாவலர் பணியிடமாகிய மகளிர் தொழில் நுட்பக் கல்லூரியிலுள்ள மதிப்பிற்குரிய ஆசிரியர்களும், அலுவலர்களும், நட்பிற்குரிய மாணவியர்களும், குறிப்பாக கட்டுமானக் கலையியலின் துறைத்தலைவர் பிரபு, கணினி துறை ஆசிரியர் முருகன், மொழிநடையை மதிப்பிட்டு உதவிய ஓட்டுனர் சீனு.
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திலுள்ள பேராசிரியர்கள், அலுவலர்கள். குறிப்பாக நாட்டுப்புறவியலறிஞர் ச.பிலவேந்திரன், நூலகர் கு.இராஜேந்திரன்.
புதன் வட்டம், தேடலை நோக்கி ஆகியவற்றில் இயங்குகின்ற சக ஆய்வாளர்கள். குறிப்பாக விஜயலட்சுமி, உமாசங்கரி, கீதா, சிவகாமி – இராஜலட்சுமி, கேமசரி, இரா.ஞானசேகர், இந்துமதி, கவுதமி, சௌ.சுரேஷ், எஸ்தர், தமிழரசி, ஹேமலதா, கலா. மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் ஆசிரியர்களும் மாணவ நண்பர்களும். குறிப்பாக சமூக அறிவியல் ஆசிரியர் இரா.குலசேகரன், முனைவர் சே.பெ.ஆனந்தன், ஜெ.லட்சுமி(நூலகர்), எழிலன், பவித்ரா, ராஜசேகர்.
பணியிலும் ஆய்விலும் என் சக தோழனாகிய சு.குமார். நேசத்திற்குரிய த.சேகர்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி, குடியுரிமை பாதுகாப்பு நடுவம், பெண்கள் எழுச்சி இயக்கம், நான் சார்ந்திருக்கின்ற மக்கள் கலை இலக்கிய கழகம் போன்ற சமூகவிஞ்ஞானக் களங்களிலுள்ள தோழர்கள். மேலும் SUMSஇன் சாளரம் இதழின் முன்னாள் ஆசிரியர் மனுவேல் அமல்ராஜ் அகராதி. என்னை அன்போடு அணைத்திருக்கும் அப்பா ராமமூர்த்தி குடும்பத்தினர். செம்படுகை நன்னீரகம் (புதுச்சேரியில் இயங்குகின்ற சமூக சுற்றுச் சூழலியல் அமைப்பு).
நான் வியந்த சிறுவன் 8ஆம் வகுப்பு ஜெ.பிரவீன்குமார், சீ.சியாமளாகௌரி, மு.செல்வக்குமார், பொன்னுச்சாமி, சண்முகராஜா சிறீகாந்த், செய்தியாளர் அமலோற்பவமேரி, கரசூர் பத்மபாரதி, கோபி உமாமகேஷ்வரி, அமுரா ராஜவேல், இரா.ஹரிகரன் (தம்பி), நண்பர் கணேஷ்பாபு, மீனாம்பாள்புரம் அசார், கணிப்பொறி வீரர் சிறீதர், அயோத்திதாசர் அறக்கட்டளை அரிமா, இணையாளர்கள் ஹேமமாலினி சிவராம பாலசந்திரன், கட்டுமானக் கண்காணிப்பாளர் நாராயனன், மின்பொறியாளர் முருகவேள், டெய்லர் சு.லோகு, அன்பன் ர.கார்த்திக் ஆனந்தி, மாப்ள IASபழனிசாமி, 9ஆம் வகுப்பு பிரகாஷ் செல்லம், ஊடாட்டம் ஆய்வுக்குழு, டாக்டர் அம்பேத்கர் மாணவர்விடுதி நண்பர்கள் (புதுச்சேரி)…
நனவாலும் நினைவாலும் என்னை பிரியாது இணைந்திருக்கும் நேசத்திற்குரிய சகநண்பர்கள், தோழர்கள், குடும்பத்தினர்கள், உறவினர்கள், என் காதலுக்கு உரியவர்களும் என்னைக் காதலித்தவர்களும்.
நான் நினைத்து மகிழ்கின்ற உங்கள் அனைவருக்கும் சகமனிதனாக சொல்லி முடிக்க விரும்புகிறேன்!
அனைவருக்கும் எனது பேரன்பான நன்றிகள்.
அறிவன்புடன்
புதியவன்
குறிப்பு
*நீங்களும் சமூகவிஞ்ஞானி ஆகலாம் * (YOU MAY ALSO BECOME A SOCIAL SCIENTIST ) *
புதியவன் * முதற்பதிப்பு: ஆகஸ்டு 2014 * வெளியீடு: முகம், 20/37, 13-வது தெரு, அய்யர் மனைப்பிரிவு, சிங்காநல்லூர், கோவை -5 * தொலைபேசி: 0422-2593938 * மின்னஞ்சல்: mugambooks@gmail.com * அச்சு: ஜெமினி ஆப்செட் பிரிண்டர்ஸ் * பக்கங்கள்: 128 * படிகள்: 1000 * Rs.80/-*
*எமது இந்த நூலை புதுப்பிக்கப்பட்ட வடிவில் தேவையானத் திருத்தங்களுடன் வலைதளத்தில் பதிவு செய்கிறேன். எமது இந்த முயற்சியை மே 5, 2017 உலக மாமேதை காரல்மார்க்ஸின் 200வது பிறந்ததின மகிழ்வின் நினைவாக மேற்கொள்கிறேன். சமூகவிஞ்ஞான பயிற்சியின் ஆரம்ப முயற்சியாளர்கள் இனி எளிமையாகப் பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் மகிழ்கிறேன். இந்நூலில் இடம் பெற்றுள்ள கவிதை கட்டுரை பகுதிகள் வலைதளத்தின் நூல் பகுதியில் இடம்பெறாது. மாறாக கவிதை இலக்கியம், வசன இலக்கியம் என்ற பிரிவில் இடம்பெறுகிறது. நூல் பகுதியில் சமூகவிஞ்ஞானத் தத்துவ விதிகளின் அறிமுகமும் பயிற்சிக்கான வழிமுறைகளும் மட்டுமே இடம்பெறுகின்றது * மகிழ்ச்சி * சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்போம் * சமூகவிஞ்ஞானிகளுக்கு வலிமை சேர்ப்போம் - சமூகவிடுதலையை வென்றெடுப்போம்.*
No comments:
Post a Comment