எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Saturday, June 25, 2016

பரிபூரண நோயாளிகள்




பரிபூரண நோயாளிகள்
புதியவன்

இந்த உலகிற்கு பயங்கரமான முகம்.
அதாவது போர்களின் உருவம்.
வெற்றியின் இலக்கு போர்கள் அற்ற உலகை அடைவதே.
இலக்கை அடைவது மனித குலத்தின் கடமை.

பெரும்பாலான மனிதர்களோ
கடமை மறந்து  வேகமாக ஓடுகின்றார்கள்...
கடிவாளம் கட்டப்பட்ட குதிரைகள்போல!

ஓட்டத்தின் வேகத்தில் மன நோயாளிகளாக மாறுகிறார்கள்.
இந்த உலகம் மனநோயாளிகளின் உலகமாக மாறியிருக்கிறது.

வேலைக்கு ஏற்ற ஓய்வு கிடைக்காதவர்களும்...
மனதுக்கு விருப்பம் அற்ற வேலைகளில் சிக்கிக் கிடப்பவர்களும்...
சுதந்திரமான மனநிலை இல்லாமல் இறுக்கமாக வாழ்பவர்களும்...
நேர்மையும் அக்கறையும் உடைய சக மனிதரிடம்
மனம் திறந்த உரையாடலில் ஈடுபட முடியாதவர்களும்...

மன நோயின் பலவிதமான அறிகுறிகளைப் பெற்றிருக்கிறார்கள் .
அதாவது, மனநோயாளிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!
நோயைக் குணப்படுத்தும் மருந்தும் அவர்களிடமே இருக்கின்றது.
ஆனால் பிரச்சினை எதுவென்றால்
அவர்கள் தங்களைப் பரிபூரணமானவர்கள் என்பதாக நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.


No comments:

அதிகம் படித்தவை