பூமிக்கும் மூளைக்கும் இடையில்
பூமிக்கும் மூளைக்கும் இடையில்
புதியவன்
ஆங்கிலச் சோறு போட்டு
அறிவியல் சாம்பார் ஊத்தி
கணக்கு உப்பு
கணிப்பொறி அப்பளம்
வரலாறு வருவல்
புவியியல் பொறியல்
குடிமையியல் கூட்டு
மொத்தமாய் பிசைந்து
சோத்துல கொட்டி
தாய்மொழி ஊறுகாய்
தொட்டு நக்கி
கல்வி உரிமைய
காசுக்கு வாங்கி
எதுக்கு படிச்சோம்?
என்னத்தப் படிச்சோம்?
படிச்சதே நெனவில்ல
பாதையும் தெளிவில்ல
வாழ்க்கையே புரியல
வாழவும் தெரியல
எதுய்யா வாழ்க்கை?
எதுய்யா படிப்பு?
மனப்பாடம் செஞ்சு
வாந்தி எடுப்பத
நாடு நக்கிக் குடிச்சு
வளரவாப் போவுது?
நாடே வாழல...
நாம எப்படி வாழ?
காக்கை சிறகினிலே, ஜுன் 2012 (பக் 26)
காக்கை சிறகினிலே, ஆகஸ்டு 2012 (பக் 43)
சாளரம் மாணவர் இதழ் விபரம் குறிப்பில்லை
நீங்களும் சமூகவிஞ்ஞானி ஆகலாம் என்ற நூலில்
அதிகம் படித்தவை
-
இயல் – 1 இலக்கியம், இனவரைவியல், பழங்குடிகள் 1.1. முன்னுரை எது இலக்கியம் என்பதற்குப் பல்வேறு விளக்கங்களும் கலந்துரையாடல்கள...
-
இலக்கிய அறிவியல் (இலக்கியத்தின் சமூக விஞ்ஞான வரைவியல்) புதியவன் இலக்கியம் என்பது ஒரு மொழியின் வெளிப்பாடாகும். மொழி என்பது ஒரு ச...
-
ஆய்வு நோக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதினங்களில் பழங்குடி மக்களின் தனித் தன்மையான வாழ்க்கை எத்தகைய முறையில் விவர...
-
புதின ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள் ச . பாலமுருகன் சோளகர் தொட்டி என்ற புதினத்தின் ஆசிரியர் ச . பாலமுருகன் ஆவார் . ...
No comments:
Post a Comment