எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Saturday, June 25, 2016

விடுதலைக்காக…




விடுதலைக்காக
புதியவன்
கடலலையாய் சிரிக்கத்தான்
வானம் காலமெல்லாம் அழுதது

விடியலாக வளரத்தான்
பொழுது இருட்டுக்குள்ளே ஒழிந்தது

தடையின்றி பரவத்தான்
காற்று உருவமின்றி அலைந்தது

வாழ்வில் புதுமை மலரத்தான்
நம் பழமை வாடி வதங்குது

ஒற்றுமை பூத்து மகிழத்தான்
வாழ்க்கை தனிமையிலே வேகுது

வெந்துவிட்டால் எளிமைதான்
கனிந்துவிட்டால் இனிமைதான்
மக்கள் வாழ்வின் விடியல்தான்

வர்க்கப் போரின் வழியில்தான்!

No comments:

அதிகம் படித்தவை