கொம்பில்லாதகாளைகள்
புதியவன்
என் எதிரில் நீ
உன் எதிரில் நான்
என்நிலை உனக்கு
உன்நிலை எனக்கு
என் சூழலில் நீ
உன் சூழலில் நான்
நம் சூழலில்
எத்தனையோ
நீ நான் நம்மைப்போன்றே...
இருவர் மூக்கனாங்கயிறும்
இன்னொருவன் கையில்
அழகான கண்ணாடிப் பாத்திரத்தில் பூட்டப்பட்டுள்ளது
நம் உரிமைகளும், உணர்வுகளும் சிந்தனையும் சாவியும்
இன்னும் எத்தனைக்காலம்
என் மீதும்
உன் மீதும்
நம் கோபங்களும், வெறியும்
மாறிமாறி மோதுவது, வெட்டுவது, குத்துவது?
பனித்துகள்களாய் இருக்கும்வரை
நம் பாதைகளும், பயணங்களும்
நமக்கானது அல்ல
இனியாவது!
'இருவர்'களும் சந்திப்போம்
தெருமுனையில்
எதிரிகளாய் அல்ல
எதிர்ப்பவர்களாய்...
No comments:
Post a Comment